சீன அரசுக்கு சொந்தமான மருந்து நிறுவனமான சினோஃபார்ம் தனது கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் வணிக ரீதியாக கிடைக்கும் என்று கூறியது. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசி இந்தியர்களுக்கு தான் முதலில் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொரோனா தடுப்பூசி:
கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கான போட்டி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், உலகம் மிகவும் எதிர்பார்த்து உள்ள மருந்தை எப்போது கிடைக்கும் என்கிற கேள்வி அதிகமாகி உள்ளது. கடந்த வாரம், அமெரிக்காவின் உயர்மட்ட நிபுணர் அந்தோனி, இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.
5 முக்கிய அம்சங்கள்:
- இந்த ஆண்டு இறுதிக்குள் தேவையான அனுமதிகளைப் பெற்றால், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி இந்திய மக்களுக்கு முதலில் கிடைக்கக்கூடும். புனேவைச் சேர்ந்த தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) ஏற்கனவே ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் கட்டம் II மற்றும் III மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்காக இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறை அமைப்பிலிருந்து ஒப்புதல் பெற்றுள்ளது.
- ஆஸ்திரேலியாவில் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் உருவாக்கி வரும் கோவிட் -19 தடுப்பூசியைப் பெறுவதற்காக ஆஸ்திரேலியா சமீபத்தில் ஸ்வீடிஷ்-பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
- சீன மருந்து நிறுவனமான சினோஃபார்ம் அதன் கோவிட் -19 தடுப்பூசி இந்த ஆண்டின் இறுதிக்குள் வணிக ரீதியாக கிடைக்கும் என்று கூறியது. நிறுவனத்தின் தலைவர் லியு ஜிங்ஜென் இந்த தடுப்பூசிக்கு 1,000 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,800) க்கும் குறைவாக செலவாகும் என்று கூறினார். இந்த தடுப்பூசி 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ் ஆக வழங்கப்படும் என்றும் ஜிங்ஜென் கூறினார்.
- உலக சுகாதார அமைப்பு (WHO) உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு கோவிட் -19 தடுப்பூசி எளிதாக மற்றும் சமமாக வழங்கும் நோக்கில் உலகளாவிய உடன்படிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது. உலகளாவிய வசதி அதிகமுள்ள நாடுகளிலிருந்தும், இலாப நோக்கமற்ற நிறுவனங்களிடமிருந்தும் இந்த தடுப்பூசியை உருவாக்கி உலகெங்கிலும் சமமாக விநியோகிக்க COVAX நிதி வழங்கும்.
- அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா, கோவிட் -19 தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்திய அமெரிக்காவின் முதல் நிறுவனமாகும். அதன் மனித சோதனைக்கு 30,000 தன்னார்வலர்களை ஈடுபடுத்தும் நடவடிக்கையில் அந்நிறுவனம் இறங்கி உள்ளது.