இந்த கொரோனா பாதிப்பால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை 1.89 கோடி ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர் என்று இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (CMIE) தெரிவித்துள்ளது.
கொரோனவால் பாதிப்பு:
கடந்த சில மாதங்களாக சீனாவில் இருந்து பரவிய நோய் தொற்றால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். பொருளாதாரம், கல்வி அமைப்புகள், அன்றாட வாழ்வியல் என்று பல துறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் தற்போது அதிர்ச்சிகரமான ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் புற்றுநோய் வழக்குகள் 12% அதிகரிக்கும் – ஐசிஎம்ஆர் அறிக்கை!!
அதில் கூறப்பட்டது என்னவென்றால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வந்த ஊரடங்கு உத்தரவால் 1.89 கோடி சம்பளம் பெற்ற ஊழியர்கள் வேலை இழந்துள்ளார். இது கொரோனா காலத்தில் ஏற்பட்ட பணிமுடக்கம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது தகவல்கள் தெரிவிக்கின்றது. பொருளாதார வணிகங்கள் மூடப்பட்டுள்ளதால் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் முறைசார்ந்த துறைகளில் வேலையிழந்துள்ளனர்.
பலர் விவகாசயத்திற்கு திரும்பினர்:
அதுவும் கடந்த ஜூலை மாதம் மட்டும் 5 மில்லியன் லட்சம் சம்பளம் பெட்ரா ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். இது குறித்து இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் சிஇஓ மகேஷ் கூறுகையில் “இந்தியாவில் 2019-2020 ஆண்டின் சம்பளம் பெரும் வேலைவாய்ப்புகள் 190 மில்லியனாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 22 சதவீதம் ஆக குறைத்துள்ளது. தினக்கூலிகளாக வேலைபார்க்கும் 68 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். ஆனால், 1.49 கோடி பேர் விவசாயத்தில் இறங்கியுள்ளனர் இந்த காலகட்டத்தில்.” என்று தெரிவித்துள்ளார்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இந்த கொரோனா காலத்தில் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வரைமுறையில்லாத விடுப்பு வழங்கி உள்ளது மேலும் வேலையை முன்னறிவிப்பில்லாமல் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.