தமிழ் சினிமாவில் முன்னணி இசைமைப்பாளரான அனிருத்க்கும், பிரபல பாடகியான ஜோனிட காந்திக்கும் இடையே காதல் இருந்ததாக கிசுகிசுக்கள் பரவி வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனிருத்:
தமிழில் தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் இணைந்து நடித்த திரைப்படமான 3 படத்தில் ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி பதித்தார் அனிருத். இவரின் முதல் திரைப்படமே இவருக்கு பிரம்மாண்ட புகழை தேடி தந்தது. அதற்கடுத்து தொடர்ந்து பல வெற்றி படங்களை தந்தார். குறுகிய காலத்திலேயே முன்னணி இசையமைப்பாளராக ஆனார். இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் அதிலும் பெண் ரசிகர்கள் ஏராளம் என்றே சொல்லலாம்.
மேலும் எதிர்நீச்சல், கத்தி, வேதாளம் போன்ற முன்னணி ஹீரோக்களின் படத்திலும் இசையமைத்துள்ளார். தற்போது வெளியாக இருக்கும் விஜயின் மாஸ்டர் திரைப்படத்திலும் அனிருத் தான் இசையமைப்பாளர்.
இது ஒருபுறம் இருக்க இவருக்கு எப்பொழுது கல்யாணம் என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் திரைப்படத்தின் செல்லமா என்ற பாடலை அனிருத் உடன் ஜோனிடா காந்தி இணைந்து பாடியிருந்தார். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணமும் செய்துக்கொள்ள போவதாகவும் வதந்திகள் பரவி வருகிறது. ஆனால் இந்த வதந்திக்கு அனிருத் பக்கம் இருந்து எந்த பதிலும் வரவில்லை