ஐபிஎல் தொடரின் தவிர்க்க முடியாத முக்கிய அணியான மும்பை இந்தியன்ஸ் அணி போட்டிகளில் பங்கேற்பதற்காக பயிற்சியை தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் கேப்டன் ரோஹித் சர்மா, பாண்ட்யா சகோதரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ்:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடரின் 13வது சீசன் ஒத்திவைக்கப்பட்டது. ஐந்தாம் கட்ட ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகளில் வீரர்கள் வெளிப்புற மைதானத்தில் பயிற்சியை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. கொரோனா தீவிரம் அடைந்த காரணத்தால் அதில் அதிகளவில் வீரர்கள் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சியை தொடங்கி உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
மும்பையில் நகருக்கு வெளியே உள்ள கான்சோலி ரிலையன்ஸ் மைதானத்தில் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, குருணால் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ஆத்திய டரே, தவால் குல்கர்னி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் அணி நிர்வாகம் எந்த வீரரையும் பயிற்சிக்கு வரும்படி கட்டாயப்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
ஊக்கமருந்து புகார் – தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு 4 ஆண்டுகள் தடை..!
மறுபுறம் ரசிகர்கள் இன்றி ஐபிஎல் போட்டிகளை நடத்த தயாராகி வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்து உள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் பயிற்சியை தொடங்கி உள்ளதால் விரைவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என கூறப்படுகிறது.