தமிழகத்தில் 38 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – இன்று மட்டும் 1,372 பேர் டிஸ்சார்ஜ்..!

0
corona virus in chennai
corona virus in chennai

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,875 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் 12வது நாளாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்றுடன் ஒப்பிடும் பொழுது இன்று பாதிப்பு எண்ணிக்கை குறைவு தான் என்றாலும், 23 பேர் உயிரிழந்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,716 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 349 ஆக அதிகரித்து உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவில் இருந்து 1,372 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,705 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 23,891 ஆண்கள் மற்றும் 14,718 பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 1,407 பேருக்கும், செங்கல்பட்டில் 127 பேருக்கும், திருவள்ளூரில் 72 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

டாப் 5 கொரோனா பாதித்த மாவட்டங்கள்:

  • சென்னை – 27,398 பேர்
  • திருவள்ளூர் – 1,656 பேர்
  • செங்கல்பட்டு – 2,444 பேர்
  • காஞ்சிபுரம் – 623 பேர்
  • திருவண்ணாமலை – 565 பேர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here