தமிழக சட்டமன்ற தேர்தல் – எம்ஜிஆர் பாடலை மனப்பாடம் செய்யும் பிரதமர்!!

0

சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது தீவிரமான முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி எம்ஜிஆரின் பாடலை மனப்பாடம் செய்து வருகிறார்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் காரணமாக தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் பிரச்சாரம், தொகுதி பங்கீடு என அரசியல் கட்சிகள் அனைவரும் பிசியாக இருந்து வருகின்றனர். அனைத்து கட்சிகளும் தற்போது பொதுக்கூட்டத்தை நடத்தியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பல திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் உறுதி கூறி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த திட்டங்கள் அனைவரும் மக்களை கவரும் வகையில் உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் பல திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கடந்த மாதம் தமிழகத்திற்கு வந்திருந்தார். தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் கலந்துகொள்வதற்கு பிரதமர் மோடி விரைவில் தமிழக்கத்திற்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் – மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி!!

மேலும் தமிழக மக்களை கவரும் வகையில் பிரதமர் மோடி ஓர் செயலில் ஈடுபட்டு வருகிறார். அதுஎன்னவென்றால் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இணைந்து நடித்த படத்தின் பாடலை தற்போது மனப்பாடம் செய்து வருகிறாராம் மோடி. அதற்காக தனி நேரத்தை ஒதுக்கி மனப்பாடம் செய்து வருகிறாராம். இதனை அறிந்த அதிமுக மற்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here