ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெறும் டி20 போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் வீரரான மிட்செல் ஸ்டார்க் நீக்கப்பட்டுள்ளார். அதற்கான காரணத்தையும் தற்போது அவரது பயிற்சியாளரான லேங்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணியின் பல வீரர்கள் விலகியுள்ள நிலையில் தற்போது இவரும் விலகி இருப்பது அணிக்கு பெரிய பின்னடைவாக தான் இருக்கும்.
டி20 போட்டிகள்:
ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெராவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. கடந்த 27 ஆம் தேதி முதல் இரு அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டிகள் நடைபெற்றன. அதில் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அபாரமாக விளையாடி வெற்றி அடைந்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் முதல் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது. இதனை அடுத்து இன்று டி20 போட்டிகளுக்கான இரண்டவது தொடர் நடைபெற உள்ளது. இப்படியான நிலையில் தற்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வீரரான மிட்செல் ஸ்டார்க் தற்போது போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
சைடு போஸில் முன்னழகை காட்டிய நயன்தாரா – சொக்கிப்போன ரசிகர்கள்!!
இந்த அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதற்காக காரணத்தை தற்போது அவரது பயிற்சியாளரான ஜஸ்டின் லேங்கர் பேசுகையில், “கிரிக்கெட் வீரரான ஸ்டார்க் குடும்பத்தினர்களில் ஒருவருக்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் அவர் தற்போது போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அதே போல் தனது குடும்பத்தினரோடு நேரத்தை செலவழிக்கவும் அவர் விருப்பம் தெரிவித்தார். நாங்கள் அதற்கு தடையாக இருக்க விரும்பவில்லை” இவ்வாறாக தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணியின் பல வீரர்கள் விளக்கியுள்ள நிலையில் தற்போது இவரும் விலகி இருப்பது அணிக்கு பெரிய பின்னடைவாக தான் இருக்கும்.