விவசாயிகள் அனைவரையும் மகிழ்ச்சியில் அல்லாத காத்திருக்கிறது மேட்டூர் அணையின் நீர் வரத்து. தற்போது, கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் நீர் நிரம்பி வருவதால், உபரி நீர் திறந்துவிடவுள்ளனர்.
தொடர் கனமழை:
கடந்த சில நாட்களாக எல்லா இடங்களிலும் தொடரந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கர்நாடக மாநிலத்தில், உள்ள எல்லா இடங்களிலும் மழை அதிகமாக பெய்து வருகிறது. இதனால், அங்கு உள்ள அணைகள் அனைத்திலும், நீர் தற்சமயம் நிரம்பி உள்ளது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
ஒட்டுமொத்தமாக காவேரி நீர் மேட்டூர் அணையில் இருந்து 1.34 லட்சம் கன அடி நீர் வெளியாகிறது. இந்த நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் இருந்து வர உள்ளது. அணையில் உள்ள நீர் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி 34,000 கனஅடியாக இருந்தது.
விஜயவாடாவில் தீ விபத்து – கொரோனா நோயாளிகள் 10 பேர் மரணம்!!
ஆனால், அடுத்த 24 மணி நேரத்தில் அது 45,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. தொடரந்து அதன் கனஅடி உயர்ந்து கொன்டே வருகிறது. ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
இன்னும் வரும் சில நாட்களுக்கு கனமழை நெடிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால், 120 கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணை அடுத்த ஒரு வாரத்தில் நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டெல்டா பகுதி விவாசியிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.