Saturday, May 18, 2024

விஜயவாடாவில் தீ விபத்து – கொரோனா நோயாளிகள் 10 பேர் மரணம்!!

Must Read

-நேற்று ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் கொரோனா சிகிச்சை அளித்த வந்த ஹோட்டலில் தீடிரென்று தீ பற்றி எரிந்தது, இதில் 10 நோயாளிகள் உயிர் இழந்துள்ளனர்.

தீ விபத்து:

ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள விஜயவாடா மாவட்டத்தில் உள்ள ஸ்வர்ணா ஹோட்டலை கொரோனா சிகிச்சைக்காக நோயாளிகள் 30 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்தனர். செவிலியர்கள் 10 பேர் இந்த விபத்தின் போது இருந்துள்ளனர்.

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கு – எஸ்ஐ பால்துரை கொரோனாவால் பலி!!

vijayawada fire accident
vijayawada fire accident

நேற்று அதிகாலை தீடிரென்று கீழ் தளத்தில் தீ பற்றி எரிந்துள்ளது. அது வேகமாக, முதல் மற்றும் தளங்களில் பரவி உள்ளது. இதனை அறிந்த நோயாளிகள் ஹோட்டல் ஜன்னல் வழியாக குதித்து தப்பிக்க முயன்றுள்ளனர். அதில், இருவர் உயிர் பிழைத்துள்ளனர். 10 பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர். அம்மாநில அரசு இந்த விபத்துக்காக விசாரணையை நடத்த உத்தரவிட்டுள்ளது.

மேலும் கூறப்படுவது:

தீ அதிகாலை 5 மணிக்கு பரவ ஆரம்பித்து இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தின் போது ஜன்னல் வழியாக குதித்த இருவரில் ஒருவருக்கு காலில் அடிபட்டுள்ளது. இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக மின்சார கசிவு தான் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனாலும், அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இந்த விபத்து குறித்து அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது ” இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி உடன் பேசி உள்ளேன். அவர் இந்த விபத்தில் இருந்தவர்களின் குடும்பத்தாருக்கு 50 லட்சம் நிதி ஒதுக்குவதாக கூறியுள்ளார். இறந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.”

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -