முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று!!

0

இந்திய முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா தொற்று:

இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. 81 வயதான பிரணாப் முகர்ஜி வழக்கம் போல மருத்துவமனை பரிசோதனைக்கு சென்ற பொழுது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் இணைய கிளிக் பண்ணுங்க!!

பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் – யுஜிசி திட்டவட்டம்!!

இந்தியாவில் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கர்நாடக முதலமைச்சர் எடியுரப்பா, முன்னாள் முதலவர் சித்தராமையா, மத்திய பிரதேஷ் முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் எம்எல்ஏ.,க்கள் என பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிபிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here