விஜய் மற்றும் சூர்யாவை விமர்சித்து பல பதிவுகளை வெளியிட்டு ஊடக வெளிச்சத்தில் இருப்பவர் மீரா மிதுன். தற்போது நித்யானந்தா வெளியிட்ட கைலாசா நாணயத்தை பாராட்டி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மீரா மிதுன்
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமான மீரா மிதுன் பிக் பாஸ் மூலம் பிரபலமானார். இவர் பிக் பாஸ்ஸில் இருக்கும்போதே பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தார். தன்னை தானே சூப்பர் மாடல் என புகழ்ந்துகொள்ளும் மீரா மிதுன் விஜய் மற்றும் சூர்யா தனது பட வாய்ப்புகளை கெடுப்பதாகவும் மேலும் அவர்கள் தன்னை பார்த்து பொறாமை படுகின்றனர் என்றும் கூறிவந்தார்.
எதற்காக பொறாமை பட வேண்டும் என கேள்வி எழுப்பியதற்கு அவர்கள் 25 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு பிடித்த இடத்தை தான் 2 ஆண்டுகளில் பிடித்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் விஜய் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். மேலும் பலர் மீரா மிதுனின் உருவ படங்களை எரித்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
Everyone mocked him,Everyone abused him,Everyone ran him down, Every media was against him,but today he creates a new country #Kailasa, going strong day by day. Would love to visit #kailasa soon. Lots of love #nithyanandaparamashivam ♥️https://t.co/n8URIXpAJR
— Meera Mitun (@meera_mitun) August 24, 2020
தற்போது நித்யானந்தா வெளியிட்டுள்ள கைலாசா நாணயத்தை பாராட்டி ட்வீட் செய்துள்ளார், அதில் அவர் கூறியிருந்ததாவது, “எல்லோரும் அவரை கேலி செய்தனர், எல்லோரும் அவரை துஷ்பிரயோகம் செய்தனர், எல்லோரும் அவரை கீழ்த்தரமாக பேசினீர்கள், ஒவ்வொரு ஊடகங்களும் அவருக்கு எதிராக இருந்தன, ஆனால் இன்று அவர் ஒரு புதிய நாட்டை உருவாக்கியுள்ளார். கைலாசா, நாளுக்கு நாள் வலுவாக செல்கிறது. விரைவில் கைலாசாவைப் பார்க்க விரும்புகிறேன். லாட்ஸ் ஆப் லவ்.” என பதிவிட்டுள்ளார்.