நடிகர் விஜயின் மாஸ்டர் படம் பொங்கலையொட்டி 13 ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஆனால் மாஸ்டர் படம் திரைக்கு வரும் முன்னதாகவே அந்த படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் 25 கோடி கேட்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
படக்காட்சிகள் லீக்
நடிகர் விஜய் நடித்து தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் மாஸ்டர். இப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே திரையிடப்பட இருந்தது. கொரோனா ஊரடங்கால் இந்த படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. தொடர்ந்து நவம்பர் மாதம் தியேட்டர்கள் திறக்கப்பட்டு புதுப்படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில் தற்போது இந்த படம் வெளியாகியிருக்கிறது. மேலும் இந்த படத்தை இணையதளத்தில் வெளியீட அனுமதி இல்லை என உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இதுதான் காரணம் – மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் விளக்கம்!!
ஆனால் படம் வெளியான அன்றே சில சமூகவலைதளங்களில் இப்படம் வெளியானது. இது படக்குழுவினரை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியது. படத்தை யாரும் இணையதளங்களில் பார்க்கவேண்டாம் என்று படக்குழுவினர் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் இந்த சம்பவம் தொடர்பாக தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் மூலம் மாஸ்டர் பட காட்சிகள் வெளியானதால் அந்நிறுவனத்தின் மீது 25 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.