மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தற்போது தனது காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அறுவை சிகிச்சைக்கு பின் கமலின் உடல்நிலை நன்றாக இருப்பதாக நடிகை சுருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
சுருதிஹாசன் அறிக்கை
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நடிகர் கமல்ஹாசன் தனது தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தினால் அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் அந்த காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதாகவும் அதுவரை ஓய்வு வேண்டும் என மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியிருந்தனர்.
மாஸ்டர் பட காட்சிகள் இணையதளத்தில் லீக் – தயாரிப்பாளர் 25 கோடி கேட்டு நோட்டிஸ்!!
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சில வருடங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டதால் காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளேன். மீண்டும் மற்றுமொரு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் அறுவை சிகிச்சைக்கு பின்பு சிலநாள் ஓய்வு தேவைப்படுகிறது. ஓய்வுக்கு பின்பு எனது பணிகளுக்கு மீண்டும் திரும்புவேன். அதுவரையிலும் மாற்றத்திற்கான நம் உரையாடல் இணையவழியாக தொடர்ந்து கொண்டிருக்கும்’ என்று கூறினார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அறுவை சிகிச்சைக்கு பின் நடிகைகள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சராஹாசன் கமலின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், ‘ ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று காலை டாக்டர் ஜெ.என்.எஸ். மூர்த்தி ஒருங்கிணைப்பில் எலும்பியல் நிபுணர் டாக்டர் மோகன்குமார் தலைமையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்கு பின் அப்பா நலமாக உள்ளார். நான்கு நாட்கள் மருத்துவமனை ஓய்வுக்கு பின் வீட்டிற்கு திரும்புவார். பின்பு சிலநாள் ஓய்வுக்கு பின்பு மக்களை சந்திப்பார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ivlo naal engadi ponna