தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு, இலவச பொருட்கள், ரூ.1000 நிதியுதவி – தமிழக அரசின் அறிவிப்புகள்.!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் நாளையுடன் முடிவடைய உள்ள ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்து உள்ளது. மேலும் பல்வேறு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு உள்ளன.

தமிழக அரசின் அறிவிப்புகள்:

  • தமிழகத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை உலக சுகாதார நிறுவனத்தின் கருத்து மற்றும் மருத்துவ வல்லுனர்களின் அறிவுறுத்தலின் படி ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
  • ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் ரேஷன் கார்டுதாரர்களுக்கான மே மாதத்திற்கான பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். அதில் ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் மற்றும் 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
  • ஏற்கனவே அறிவித்தபடி காலை 6 மணிமுதல் மதியம் 1 மணி வரை பேக்கரிகள் மற்றும் ஹோட்டல்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அங்கு பார்சல் மட்டுமே வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
  • தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கு அமலில் இருந்த போது அமலில் இருந்து அனைத்து விதிமுறைகளும் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • கட்டிடத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் ரூ. 1000 நிதியுதவி வழங்கப்படும்.
  • பிறமாநில தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
  • தமிழகத்தில் ஊரடங்கை தளர்த்தினால் நோய்த்தொற்று அதிகரிக்கும் என்பதால் இந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார்.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here