இந்தியாவில் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள சென்னை, செங்கல்பட்டு, மும்பை உள்ளிட்ட 13 நகரங்களில் கடுமையான விதிமுறைகளுடன் 5ம் கட்ட ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடுமையான ஊரடங்கு 5.0:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து நாளையுடன் (மே 31) முடிவடைய உள்ள நான்காம் கட்ட ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி அவர்களை சந்தித்தும் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அடுத்தகட்ட நடவடிக்கைகள், ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்த்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
ஊரடங்கை முழுமையாக தளர்த்தினால் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக இன்னும் தீவிரமெடுக்கும் என்பதால் நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து, மற்ற பகுதிகளில் சில தளர்வுகளை அறிவிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 70 சதவீதம் பேர் 13 முக்கியமான நகரங்களைச் சேர்ந்தவர்கள். இதனால் இந்த நகரங்களுக்கு மட்டும் கடுமையான சட்டதிட்டங்களுடன் ஊரடங்கு 5ஐ மத்திய அரசு நீட்டிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை, புதுடெல்லி, அகமதாபாத், தானே, புனே, ஐதராபாத், கொல்கத்தா / ஹவுரா, இந்தூர் (மத்தியப் பிரதேசம்), ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் (ராஜஸ்தான்), சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் (தமிழ்நாடு) ஆகிய நகரங்கள் தான் மிக அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே அவற்றிற்கென திருத்தப்பட்ட கட்டுப்பாட்டு வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |