தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு ரிசல்ட் & பள்ளிகள் திறப்பு எப்போது..? – அமைச்சர் அறிவிப்பு..!

0

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. 62 நாட்களை கடந்து விட்ட ஊரடங்கு பாதிப்பால் மாணவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனவால் ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் 11 & 12ம் வகுப்பிற்கான ஓரிரு பாடங்களுக்கு மறுதேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் திறக்கப்படும் பள்ளிகள் இந்த முறை கொரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் மாதம் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் முடிவடைந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு விடைத்தாள் திருத்தும் பணிகள் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. இதனால் 10 மற்றும் 12ம் வகுப்பிற்கு தேர்வு முடிவுகள் வரும் ஜூலையில் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதால் இப்போதைக்கு பள்ளிகளை திறப்பது சாத்தியமில்லை எனவும் இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையிலான குழு முடிவெடுக்கும் என அமைச்சர் தெரிவித்து உள்ளார். பள்ளிகள் திறக்கப்பட்ட பின் அதன் வேலைநாள்களுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் எனவும் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here