உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகல் – டிரம்ப் அதிரடி..!

0

சீனாவுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

கொரோனா பாதிப்பு:

சீனாவின் ஹவான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா பாதிப்பு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் பரவி உயிர்பலி வாங்கி வருகிறது. அமெரிக்காவில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆரம்பத்தில் இருந்தே சீனா மீது குற்றம் சாட்டி வருகிறார். கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதன் தீவிரத்தன்மை குறித்து உலக நாடுகளிடம் சீனா மறைத்ததாகவும், அதற்கு உலக சுகாதார அமைப்பு உதவியதாகவும் தொடர்ந்து கூறி வருகிறார்.

இதனால் உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்கா வழங்கி வந்த ரூ.3000 கோடி நிதியை ஏப்ரல் மாதம் முதல் டிரம்ப் நிறுத்தினார். அதைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்து உள்ளார். இது குறித்து பேசிய டிரம்ப், உலக சுகாதார அமைப்பிற்கு 450 மில்லியன் டாலர் நிதியை வழங்கிய அமெரிக்காவை விட, 40 மில்லியன் டாலர் வழங்கி வந்த சீனாவிற்கு ஆதாரவாக உலக சுகாதார அமைப்பு உறவு வைத்துள்ளது என கூறியுள்ளார்.

இந்த தவறை நிறுத்திக் கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பிற்கு பல முறை கூறியும் அதனை ஏற்காத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. முறையான சீர்திருத்தங்களை செய்யத் தவிர உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதாகவும், அதற்கு வழங்கப்பட்டு வந்த நிதி வேறு ஒரு அமைப்பிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here