தேர்தலின் போது அனைவரிடமும் ஆதரவு கேட்கும் போது தனது நண்பர் ரஜினிடமும் ஆதரவு கேட்க இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். அவரது கட்சியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி இணைந்துள்ளதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசும் போது இவ்வாறாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசியல்:
2021 மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று யார் தமிழகத்தின் அரியணையை அலங்கரிக்க போகிறார்கள் என்ற ஆர்வம் தற்போது அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. காரணம், இந்த தேர்தலில் கூடுமான வரையில் அனைவருமே முன் அனுபவம் பெரிதாக இல்லாதவர்கள். இந்த தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் தனது “மக்கள் நீதி மய்யம்” சார்பாக முதல்வர் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.
‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி – முக்கிய பொறுப்பு வழங்கிய கமல்!!
இதற்கான களப்பணிகளிலும் இறங்கியுள்ளார். ஒரு பக்கம் தனது படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என்று பிசியாக இருந்தாலும் கட்சி பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார். அந்த வகையில் இன்று அவரது கட்சியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியாக சந்தோஷ் பாபு இணைந்துள்ளார். கட்சி சார்பில் அவருக்கு தலைமை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சந்தோஷ் பாபு ஐஏஎஸ் பேசுகையில் “தமிழகம் பல துறைகளில் முன்னேறி முதல் இடங்களில் உள்ளது. ஆனால், இன்னும் முன்னேற வேண்டும். நான் பணியில் இருந்த போது தமிழக அரசு தந்த அழுத்தம் காரணமாக தான் விருப்ப ஓய்வு பெற்றேன். இந்த நிலையினை மாற்ற வேண்டும்” இவ்வாறாக பேசினார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
பின்னர், செய்தியாளர்களிடம் நடிகரும், “மக்கள் நீந்தி மய்யம்” கட்சியின் தலைவருமான கமல் பேசும்போது, “தேர்தலின் போது நான் அனைவரிடமும் என் கட்சிக்காக ஆதர்வு கேட்பேன். அப்படி கேட்கும் போது எனது நண்பரான ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்காமலா இருப்பேன்? கண்டிப்பாக ஆதரவு கேட்பேன். அதே போல் ரஜினி தனது உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். அவர் தேர்தலில் பங்கேற்றால் போட்டி போடுவேன். இல்லை என்றால் ஆதரவு கேட்பேன். டெல்லியில் விவசாயிகள் தீவிரமாக போராடி வருகின்றனர். அவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும்” இவ்வாறாக பேட்டி அளித்துள்ளார்.