அம்மா, தங்கச்சியை காண இலங்கை சென்ற லாஸ்லியாவிற்கு நடந்த விபரீதம் – சோகத்தில் குடும்பத்தினர்!!

0

இலங்கை பெண்ணான லாஸ்லியாவின் தந்தை இறப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில் தன் தாய் மற்றும் சகோதரிகளை பார்க்க இலங்கை சென்ற லாஸ்லியாவை 14 நாட்கள் தனிமைப்படுத்தியதால் குடும்பத்தினர் மேலும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

லாஸ்லியா

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியாவிற்கு தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. லாஸ்லியாவை பார்த்த அனைவருக்கும் அவரை பிடித்து போனது என்றே சொல்லாம். அவரது பேச்சும் அழகான இலங்கை தமிழும் பலரையும் வெகுவாக கவர்ந்தது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

losliya
losliya

மேலும் பிக் பாஸ் வீட்டின் பட்டாம் பூச்சியாகவே வலம் வந்தார் லாஸ்லியா. அவருக்கும் கவினுக்கும் இடையே காதல் இருந்தது நம் அனைவர்க்கும் தெரியும். இரவு பகல் என்று கூட பாராமல் பேசிக்கொண்டு இருந்தனர். கவின் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியபோதே அவ்வளவு கதறி அழுதார் லாஸ்லியா. நீண்ட நாட்களுக்கு பிறகு எதிர்பாராத விதமாக லாஸ்லியாவின் தந்தை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது. 10 வருடத்திற்கு பிறகு லாஸ்லியா அவரை பார்த்தார்.

மேலும் கவின் உடன் லாஸ்லியா பேசி பழகியதை பார்த்து கோவமும் அடைந்தார். நான் உன்னை அப்படியா வளர்த்தேன் என்றும் கூறி வருத்தப்பட்டார். இந்த காட்சிகள் யாவும் இன்னும் நம் கண்களில் நிற்கின்றனர். இப்பொழுது லாஸ்லியா தந்தை மரியநேசனின் இழப்பு பலரையும் காயப்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம். மரியநேசனின் உடலை கனடாவில் இருந்து இலங்கை கொண்டு வருவதில் பல சவால்களை மேற்கொள்ள வேண்டி உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கு சில நாட்கள் கூட ஆகலாம். இப்பொழுது தன் அம்மா மற்றும் தங்கையை காண லாஸ்லியா இலங்கை சென்றுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக இலங்கையில் உள்ள கொரோனா நடவடிக்கை படி வேறு நாட்டில் இருந்து அங்கு சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் தனது தாய், சகோதரியை கூட பார்க்க முடியாத நிலையில் இருக்கிறார் லாஸ்லியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here