பெரும்பாலும், நாம் செய்யும் வேலையை வைத்தே நம்மை எடை போடுகின்றனர். ஒருவன் அரசாங்க வேலை பார்த்தால் அவனுக்கு சமூகத்தில் கூடுதல் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும் என்பது நாம் அறிந்ததே, மேலும், அரசாங்க வேலை பார்ப்பவருக்கு தான் பொண்ணே கொடுக்கிறார்கள். இதனால் தான் பலரும் அரசாங்க வேலை மீது நாட்டம் கொண்டுள்ளனர். அப்படி நமக்கு அரசு வேலை கிடைக்க விடாமுயற்சியும் தெய்வ வழிபாடும் முக்கியம். அதிர்ஷ்டம் இருப்பவனுக்கு தான் அரசு வேலை கிடைக்கும் என்பது அனைவரும் கூறும் ஒன்று. அந்த வகையில், எந்த தெய்வத்தை வழிபட்டால் அரசாங்க வேலை கிடைக்கும் என்பதையும் , அதற்கான பரிகாரத்தையும் இதில் பார்க்கலாம்.
சிவ வழிபாடு :
ஒவ்வொரு திங்கள்கிழமைகளிலும் சிவனுக்கு அரிசி மற்றும் பால் கொண்டு பாலாபிஷேகம் செய்யுங்கள். வில்வ மாலை சாத்துங்கள்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் சிவன் மனம் குளிர்ந்து அவர் பக்தனாகிய உங்களுக்கு அருள் புரிவார். மேலும், அரசு வேலை கிடைப்பதில் உள்ள தடைகளும் நீங்கும்.
கணபதி வழிபாடு :
நாம் எத்தனை தெய்வங்களை வழிபட்டாலும் முதல் கடவுனான கணபதியை வழிபட்டால் தான் அந்த வேண்டுதல் முழுமையடையும். அந்த வகையில், தினமும் காலை அரசமரத்தடி விநாயகருக்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்யுங்கள். அதுவும், அதிகாலை 4 மணியளவில் செய்தால் அவர் மனம் குளிர்ந்து உங்களுக்கு அரசாங்க வேலை உடனே கிடைக்க செய்வார்.
சதுர்த்தி நாளில், விநாயகரை வழிபட்டால் அரசு வேலை கைகூடி வரும்.
கோமாதா வழிபாடு :
பசு என்பது லட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. நீங்கள் வேலை தேடி செல்லும்போது பசுமாட்டிற்கு கீரையோ, வெல்லமோ அல்லது கோதுமைமாவோ கொடுத்து செல்லுங்கள். உங்களுக்கு வேலை கன்பார்ம் .
துர்கா வழிபாடு :
அன்னை துர்கைக்கு செவ்வாய் கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றுங்கள். அவள் உங்களுக்கு அருள்களை அள்ளி தருவாள்.
வெள்ளி கிழமையில், அம்மனுக்கு விளக்கு ஏற்றுங்கள் . ஓய்வு நேரத்தில் காயத்ரி மந்திரத்தை உச்சரியுங்கள்.
சனிபகவான் வழிபாடு :
சனியை போல கொடுப்பவரும் இல்லை,சனியை போல கெடுப்பவரும் இல்லை என்று சொல்வார்கள். சனிக்கிழமைகளில் சனீஸ்வரனை வழிபடுங்கள் அவர் உங்கள வாழ்வில் உள்ள வினைகளை தீர்த்து வேண்டிய அருள்மழையை உங்கள் மேல் பொலிவார்.