சமீபத்தில் தொழிலதிபர் கிச்சுலுவை மணந்து கொண்ட நடிகை காஜல் அகர்வால் தற்போது தேனிலவுக்காக மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு தனது கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.
“பிரபலமான நடிகை”
தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் பல வடநாட்டு நடிகைகள் கண்டிப்பாக தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பர். அந்த வரிசையில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான நடிகை என்றால் அது, காஜல் அகர்வால் தான். தமிழில் முதன் முதலாக நடிகர் பரத்துடன் “பழனி” என்ற படத்தில் தான் நடித்தார். ஆனால், அந்த படம் வசூல் அளவில் அவ்வளவாக சாதனை புரியவில்லை.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
அதற்கு பின்பு, தெலுங்கில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் “மாவீரன்” படத்தில் நடிகர் ராம்சரனுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அந்த படம் தான் அவரை அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டியது. அதன் பின், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான நடிகர் விஜய், சூர்யா, அர்ஜுன், கார்த்தி போன்ற நடிகர்களுடன் நடித்தார். கடைசியாக, நடிகர் ஜெயம் ரவியுடன் “கோமாளி” படத்தில் நடித்தார்.
கோலாகலமான திருமணம்:
பின், தனது திருமண வாழ்க்கையை பற்றி சிந்தித்த அவர் பிரபல தொழிலதிபரான கிச்சுலுவை திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணம் எளிமையாகவும் அதே சமயம் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும் நடைபெற்றது.
நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர். திருமணம் முடிந்த தம்பதி தேனிலவுக்கு செல்வது வழக்கம்.
அப்படி காஜல் மற்றும் கிச்சுலு ஜோடி மாலத்தீவுக்கு தற்போது சென்றுள்ளனர்.
அங்கு தேனிலவினை கொண்டாடிய காஜல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் லைக்குகளை அள்ளுகிறது.