தனது வீட்டில் கூரை வழியாக வாசலில் விழுந்த ஒரு சிறிய கல்லால், சாதாரண சவப்பெட்டி செய்யும் தொழிலாளி இப்பொழுது பெரிய கோடீஸ்வரர் ஆன சம்பவம் உலக மக்களுக்கு அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது.
லக்கி சார்ம்:
இந்தோனேசியா நாட்டில் உள்ள சுமத்ராவை சேர்ந்தவர் ஜோசுவா ஹுடகலுங். இவர் சவப்பெட்டி செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு வயது 33. கடந்த ஆகஸ்ட் மாதம் இவரது வாழ்வில் நடந்த சம்பவம் எல்லா உலக மக்களையும் ஆசிரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது வீட்டு வாசலில் கூரை வழியாக கல் ஒன்று விழுந்தது. அந்த கல்லின் இடை 2 கிலோ இருக்கும். அது கண்டிப்பாக விண்கல்லாக தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டார். இதை பற்றி தனது பேஸ் புக் பக்கத்திலும் பதிவு செய்தார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
அந்த கல்லின் புகைப்படத்தையும் பகிர்ந்தார். தனது பேஸ் புக் பக்கத்தில், எங்கள் வீட்டின் முன்பு மிகப்பெரிய சத்தம் கேட்டது. அது ஒட்டுமொத்த வீட்டையும் ஆட்டம் காணச் செய்வது போன்று இருந்தது. பின்னர் வெளியே ஓடிவந்து பார்த்தோம். அப்போது வீட்டின் வாசலில் இருந்த கூரையை துளைத்துக் கொண்டு ஒரு கல் ஒன்று விழுந்து கிடந்தது. அதனை எடுத்துப் பார்க்கையில் வெதுவெதுப்பாகவே இருந்தது. இது விண்கல்லாக தான் இருக்கும் என்று கருதுகிறேன் எனப் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த அமெரிக்காவைச் சேர்ந்த கலெக்டர் ஜேரட் காலின்ஸ் என்பவர் ஜோசுவாவை தொடர்பு கொண்டுள்ளார். அவரது கல்லை வாங்கிக் கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும், அமெரிக்க கலெக்டரிடம் 9.8 கோடி ரூபாய்க்கு ஜோசுவா அந்த விண்கல்லை விற்றிருக்கிறார். இது தற்போது அரிசோனா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் உள்ள விண்கல் ஆய்வு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஜோஷ்வா தனது சவப்பெட்டி செய்யும் வேலையை நிறுத்திவிட்டு தனது சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டார். அந்த ஊரில் சொந்தமாக சர்ச் ஒன்றை கட்டப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கல் உலகில் கிடைக்காத மிகவும் அரிதான பொருள். இதன் வயது 4.5 பில்லியன் ஆண்டுகள் ஆகும். இது ஒரு கிராம் இந்திய மதிப்பில் 63 ஆயிரம் விலை என்று தெரியவந்துள்ளது.