தமிழில் தற்போது முக்கிய கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வரும் அமலா பால் தொடர்ந்து பல விசித்திரமான கெட்டப்பில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். தற்போது ஒரு அடர் காட்டில் அகோரியாக நின்றபடி வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
அமலா பால்
தமிழில் வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். முதல் படமே அவருக்கு பல சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் அடுத்ததாக அவர் நடித்த மைனா திரைப்படம் திரையுலகில் அவருக்கு நல்ல மதிப்பை ஏற்படுத்தி தந்தது. மேலும் மக்கள் மத்தியிலும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன் பின் பல படவாய்ப்புகள் அவருக்கு குவிந்தன. மற்ற நடிகைகளை விட இவர் நிறம் கம்மியாக இருந்தாலும் இவரின் நடிப்பு திறமையால் நல்ல அங்கீகாரத்தை பெற்றார். மேலும் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.
மேலும் அவர் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. அடுத்ததாக அவர் நடித்த தெய்வ திருமகள் படம் டாப் ஹிட் அடித்தது. அதில் அவர் டீச்சராக நடித்தது, அவரின் அந்த அழகான நடிப்பு அனைத்தும் அவரின் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது என்றே சொல்லலாம்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்த படத்தில் தான் ஏ.எல்.விஜய் அவர்களுக்கும் அமலா பாலிற்கும் காதல் ஏற்பட்டதாம். அதன் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கிய தலைவா படத்திலும் அமலா பால் தான் கதாநாயகி. அந்த படத்தில் போலீசாக நடித்திருப்பார். படம் ஹிட் இல்லை என்றாலும் இவரின் கதாபாத்திரம் பேசப்பட்டது.
அதன் பிறகே அமலா பால் ஏ.எல்.விஜயை வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ஒரு அவார்ட் நிகழ்ச்சியில் கூட ஏ.எல்.விஜய் அமலா பால் தனக்கு கிடைத்த பரிசு என்று கூறியிருப்பார். ஆனால் திருமணத்திற்கு பிறகு குறுகிய காலத்திலேயே இவர்கள் பிரிவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
அதன் பிறகு அவர் நடித்த ஆடை படம் பல சர்ச்சைகளை கிளப்பியது. அதன் பிறகு அமலா ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போனார் என்றே சொல்லலாம். வித்தியாசமாக போஸ் கொடுக்கிறேன் என்று பல கெட்டப்பில் போஸ் கொடுத்து அசத்தினார். தற்போதும் அடர்ந்த காட்டில் அகோரி போல போஸ் கொடுத்துள்ளார்.