நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை வருவதை ஒட்டி நாடு முழுவதும் 200 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. வருமானத்தை பெருக்குவதற்காக ரயில்வேத்துறை ஒரு புதிய இணையதளத்தையும் உருவாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு:
கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் அச்சம் காரணமாக நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவால் ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. தற்போது பொது முடக்கம் பல வித தளர்வுகளுடன் பின்பற்றப்பட்டு வருகின்றது. அதன் காரணமாகவும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டும் ஜூன் 6 ஆம் தேதியில் இருந்து பயணியர் ரயில்கள் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டும் இயக்கப்பட்டது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
அதேபோல் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதியில் இருந்து சிறப்பு ரயில் சேவைகள் தொடங்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் 180 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் சில பண்டிகை கால சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
பண்டிகை கால சிறப்பு ரயில்கள்:
இது குறித்து ரயில்வே வாரியத்தலைவர் வி.கே. யாதவ் தெரிவித்தது என்னவென்றால், “பண்டிகை காலத்தில் 200 ரயில்கள் இயக்க ரயில்வே துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்ட பின் அதிகாரப்பூர்வமாக முடிவு எடுக்கப்படும். அதேபோல், அவர்கள் ஒப்புதல் அளித்த பின் தான் தினசரி பயணியர் ரயில்களை இயக்க முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக வருமானத்தை பெருக்க ரயில்வேத்துறை தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரயில்களில் சரக்குகளை அனுப்பும் வடிக்கையாளர்களுக்காக புதிய இணையத்தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளம் வழியாக, சரக்குகளை, வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்வதுடன், குறைகளையும் தெரிவிக்கலாம்.