பரபரப்பான ஐபிஎல் தொடர் முடிந்துள்ள நிலையில் தற்போது இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடருக்காக சிட்னிக்கு தங்களது பயணத்தை மேற்கொண்டுள்ளனர். போட்டிகளுக்கு முன்னதாக வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபட உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டிகள்:
கடத்த மாதம் ஆரம்பித்த ஐபிஎல் தொடர் தற்போது தான் முடிவடைந்துள்ளது. இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் டைட்டிலை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றனர். இந்த தொடருக்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் துபாய்க்கு சென்றனர். அங்கு 14 நாட்கள் தனிமையில் ஈடுபட்டு போட்டிகளில் பங்கேற்றனர். பரபரப்பான போட்டிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் நமது இந்திய அணி வீரர்கள் அடுத்த கட்டமாக டி20 போட்டிகளில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக போட்டிகள் நடைபெற உள்ளன. இன்று சிட்னி சென்றுள்ள வீரர்கள் கொரோனா பரவல் நோய் தொற்று காரணமாக 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் ஈடுபட உள்ளனர். அப்போது பயிற்சிகளில் ஈடுபடவும் உள்ளனர்.
பகலிரவு போட்டிகள்:
மும்பை இந்தியன்ஸ் அணியினை தலைமை ஏற்ற ரோஹித் சர்மா மற்றும் கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா ஆகியோர் தசை பிடிப்பு காரணமாக தற்போது பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளாடை, கருத்தடை போன்ற ஆபாச விளம்பரங்களுக்கு தடை!!
அவர்கள் இருவரும் பின்னர் இந்திய அணியில் பங்கேற்பர் என்று கூறப்பட்டுள்ளது. விராட் கோலி தனது முதல் ஒரு நாள் தொடர் போட்டிகளுக்கு பின்னர் இந்தியா திரும்ப உள்ளதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
நவம்பர் 27 ஆம் தேதி தொடர்ச்சியாக 3 ஒரு நாள் போட்டிகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஒரு நாள் பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது. இந்த தகவல்களை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.