தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக கலக்கி வந்தவர் காஜல் அகர்வால். தற்போது அவருக்கு திரையுலகில் மார்க்கெட் குறைந்த நிலையில் பல வருடங்களாக காதலித்து வந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். தற்போது ஹனிமூனுக்காக சென்றிருக்கும் காஜல் தம்பதி நீருக்கடியில் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
காஜல் அகர்வால்
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் காஜல் அகர்வால். மேலும் பல நாயகிகளுக்கு கடும் போட்டியாகவும் இருந்தவர். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் நம்ம காஜல்.
காஜலுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. அவரின் அந்த எக்ஸ்ப்ரசன் நடிப்பு திறன் அனைத்தும் மக்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லாம். மேலும் அவர் அழகு ராஜா படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
நடிகர் கார்த்தியும் இவரும் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கள் வெளியாகின. தற்போது 35 வயதை அடைந்த காஜலுக்கு பட வாய்ப்புகளும் குறைந்தன. இதனால் வயதான நடிகர்களுடன் ஜோடி சேரும் நிலையும் ஏற்பட்டது. காஜலின் ரசிகர்களும் எப்பொழுது திருமணம் என்று நச்சரிக்க லாக்டவுனில் காதும் காதும் வைத்தவாறு நிச்சயத்தை முடித்தார்.
அதன் பிறகு இந்த விஷயம் சமுக வலைத்தளங்களில் பரவ திருமண பத்திரிகையை தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டார். மேலும் கோலாகலமாக நடந்தேறிய காஜல் திருமணம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செய்யப்பட்டதாம்.
இவர்கள் திருமணம் முடிந்து தற்போது ஹனிமூன் சென்றுள்ளனர். அதில் கடலுக்கடியில் போட்டோஷூட் செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதனால் காஜல் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.