முக அழகை அதிகரிக்க கடைகளில் விற்கப்படும் கண்ட பொருட்களை உபயோகித்து முகத்தை கெடுத்துக் கொள்கிறோம். வெளியே செல்லும்போது மேக்கப் செய்து கொள்கிறோம் ஆனால் முகத்தில் வெயில்படும் போது அந்த கிரீம்களுடன் வியர்வையும் கலந்து முகத்தில் படிவதால் சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே தான் இயற்கையான முறையில் முகத்தை பொலிவாக்குவது மிக முக்கியம்.
முகப்பொலிவு:
சிலருக்கு முகத்தில் பருக்கள் இருக்காது. ஆனால் அதே சமயம் பொலிவும் இருக்காது. இதற்கு முக்கிய காரணம் நாம் முகத்தை சரிவர பராமரிக்காததே. வீட்டிலேயே உள்ள எளிய பொருட்களை வைத்தே முகப்பொலிவை அதிகரிக்கலாம். ஆனால் அதனை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
அப்பொழுது தான் அதன் பலன் முழுதாக கிடைக்கும். எளிமையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே Face Pack எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…
தேவையான பொருட்கள்
- பச்சரிசி
- கடலைப் பருப்பு
- அதிமதுரம்
- பாசிப்பயிறு
- கஸ்தூரி மஞ்சள்
- தக்காளி
- பால்
- தண்ணீர்
- கேரட்
- முள்ளங்கி
செய்முறை:
- முதலில் பச்சரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பயிறு, அதிமதுரம், கஸ்தூரி மஞ்சள் இவைகளை அரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு தனியாக முள்ளங்கி மற்றும் கேரட்டை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விட்டு முகத்தை நன்றாக துடைத்து பிறகு பாலை முகத்தில் தடவவும். அது காய்ந்ததும் முகத்தை கழுவிக் கொள்ளவும்.
- அதன்பின் தக்காளியை இரண்டாக நறுக்கி சர்க்கரையில் தேய்த்து முகத்தில் 5 நிமிடங்கள் தொடர்ந்து Scrub செய்யவும். இதனால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் மறையும்.
நரை முடியை இயற்கையான முறையில் கருமையாக்க – சூப்பரான டிப்ஸ்!!
- அடுத்ததாக தண்ணீரை சூடு படுத்தி எடுத்து அதில் ஆவி பிடிக்க வேண்டும். இதனால் முகத்தின் உள்ளே இருக்கும் அழுக்குகள் வெளியேறும்.
- அடுத்ததாக கேரட், முள்ளங்கி கலவையை முகத்தில் தடவி அதனை 10 நிமிடம் கழித்து கழுவவும்.
- பிறகு அரைத்து வைத்த பாசி பருப்பு கலவையை தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து கழுவவும். இப்பொழுது உங்கள் முகம் மிருதுவாகவும், அழகாகவும் இருக்கும். இதனை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் மேக்கப் செய்ய தேவையே இருக்காது. முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை முழுமையாக நீக்க இந்த வழிமுறைகள் உதவும்.