முகத்தை எளிய வகையில் கருமை நீங்கி வெண்மையாக மாற்றுவது எப்படி என பார்க்கலாம்.
வெண்மையான முகம்
பெண்கள் அனைவருக்குமே தான் கலராக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் இதனாலேயே பல கெமிக்கல் கிரீம்களை முகத்தில் பூசி முகத்தையே கெடுத்துக்கொள்கின்றனர். தொடர்ந்து இந்த கிரீம்களை பயன்படுத்தி வந்தால் ஒரு கட்டத்திலும் தோல் சுருங்கி விடும். மேலும் முகத்தில் உள்ள மெலனின் அளவு குறைந்து விடும். வீட்டில் உள்ள பல பொருட்கள் நம் முக அழகிற்கு வழிவகுக்கும் ஆனால் அதனை நாம் பயன்படுத்துவது இல்லை.
இதனால் அழகு சாதனைகளை பயன்படுத்தும்போது சிலருக்கு இதனால் முகத்தில் சில ஒவ்வாமை ஏற்படுகிறது. இதனை சிலர் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பதால் நாளடைவில் முகத்தில் நீங்காத தழும்பாக ஏற்படுகிறது. எனவே தான் இயற்கை பொருட்களை பயன்படுத்துவது மூலம் முகத்திற்கு இயற்கையான அழகை கிடைக்கும். வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே முகத்தை வெண்மையாக்குவது எப்படி என பார்க்கலாம்.
- காலையில் எழுந்ததும் முதலில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும். மேலும் நேரத்திற்கு சாப்பிடும் பழக்கமும் வேண்டும். முக அழகிற்கு நம் உணவு பழக்கங்களும் ஒரு முக்கிய காரணம்.
- கிரீன் டீ தினமும் ஒரு வேளை குடிக்கலாம். மேலும் இஞ்சி, கொத்தமல்லி, கேரட் போன்றவற்றை சாறு எடுத்து குடித்தால் முகம் பொலிவு பெரும். இயற்கை வெண்மை கிடைக்கும். ஏனெனில் கொத்தமல்லி வயிற்றை சுத்தப்படுத்தும்.
- தண்ணீர் மற்றும் சீனி கலந்து அதனை முகத்தில் scrub செய்யவும். இதனால் இறந்த செல்கள் மறையும். மேலும் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் முகம் இயற்கையாகவே பளபளக்கும்.
- இரவு தூங்கும்போது தொப்புளில் நல்லெண்ணெய் விட்டு தூங்கவும். இதனால் முகம் பொலிவு பெரும்.
- தினமும் ஒரு பழ வகை சாப்பிட்டு வந்தால் முகம் வெண்மையாகும். சாதம் வடித்த தண்ணீரில் வெண்ணெய் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு 3 நாட்களுக்கு ஒரு முறை குடித்தால் முகம் பொலிவு பெரும்.
- தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் மசாஜ் செய்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.