காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மறைவை அடுத்து அவர் பதவி வகித்த இடம் காலியாக உள்ளதால் அடுத்த 6 மாதத்தில் அங்கு இடைதேர்தல் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
வசந்தகுமார் மறைவு:
கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்த குமார், 74 கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது உடல் அவரது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
அவர் எம்.பியாக பதவி வகித்து வந்த கன்னியாகுமரி மக்களவை தொகுதி அவர் மரணமடைந்ததும் காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்தது. தற்போது அந்த தொகுதிக்கு 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
கடுமையான போட்டி:
6 மாதத்தில் தேர்தல் நடக்கப்பட இருந்தால் பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி நேரடியாக தேர்தலில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த வசந்தகுமார் மகனும் நடிகருமான விஜய் வசந்த களமிறங்குவர் என்று தெரிகிறது.
போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகை ராகினி கைது!!
அவருக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் களமிறங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.