தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய Police SI தேர்வில் முறைகேடு இருந்ததை அடுத்து தேர்விற்கான இறுதி பட்டியலை தேர்வாணையம் வெளியிடவோ அல்லது பணி நியமனம் செய்யவோ கூடாது என்று ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தேர்வில் முறைகேடு:
கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் உதவி ஆய்வாளர் பணிக்காக எழுத்துத் தேர்வினை நடத்தியது. தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இந்த தேர்வில் பங்கேற்றனர். இந்த தேர்வு முடிவுகள் அரசு சார்பில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக தேர்வு எழுதிய மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
இந்த தேர்வு முடிவுகளில் வேலூரை சேர்ந்த 144 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அடுத்தடுத்த பதிவு எண்களை கொண்டவர்கள். இதன் மூலமாக தேர்வு அறையில் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது போன்றே உடல் தகுதி தேர்விலும் 5,275 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் 1,254 பேர் முறைகேடாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதிகள் விசாரணை:
இந்த வழக்கினை முதலில் தனி நீதிபதிகள் விசாரித்தனர். தனி நீதிபதிகளின் உத்தரவை எதிர்த்து மீண்டும் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கினை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தற்போது விசாரித்தனர்.
6 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு மரணம் – உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு கொடூரம்!!
நீதிபதிகள் தற்போது கூறியுள்ளதாவது “3 பேர் கொண்ட குழு இந்த முறைகேடுகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தங்களது விசாரணையை முடிக்கும் வரை தேர்வாணையம் தேர்வர்களின் இறுதி பட்டியலை வெளியிடக் கூடாது. அதனை இறுதி செய்யவும் கூடாது.” என்று தெரிவித்துள்ளனர். கூடுதலாக, தேர்விற்கான இறுதி பட்டியலை தேர்வாணையம் வெளியிடவோ அல்லது பணி நியமனம் செய்யவோ கூடாது என்றும் ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.