தொடர்ச்சியாக உயர்ந்து வரும் தங்க விலை இன்றும் அதிகபட்சமாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மீண்டும் தங்க விலை 40 ஆயிரத்தை தொட்டு விடுமோ என்று அச்சத்தில் உள்ளனர். சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று நினைத்திருந்தவர்கள் கூட மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தொடர்ச்சியாக உயர்ந்து வரும் தங்க விலை:
கடந்த வாரம் முழுவதும் தங்க விலை சரிந்து வந்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், அதற்கு அடுத்து வந்த நாட்களில் எப்போதும் போலவே தடாலடியாக உயர்ந்து வந்தது. சில நாட்கள் மிகவும் படிப்படியாக குறையும் தங்க விலை ஏற்றம் கண்டால் மட்டும் அதிரடியாகவும், தடாலடியாகவும் உயர்ந்து வருகின்றது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இதனால் நகை பிரியர்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளை நடத்த நகை வாங்க வேண்டும் என்று நினைத்தவர்கள் அனைவரும் கவலை அடைந்துள்ளனர். இன்றும் தங்க விலை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்க விலை:
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் (22 கேரட்) சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ரூ.37,840, ஒரு கிராம் தங்கம் ரூ.4,730 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கம் (24 கேரட்) ஒரு கிராம் ரூ.5, 114 என்றும் ஒரு சவரன் ரூ.40,912 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
#INDvsAUS இந்திய பவுலர்கள் அபாரம் – முதல் இன்னிங்சில் 195 ரன்களுக்கு சுருண்டது ஆஸி!!
வெள்ளி ஒரு கிராம் ரூ.71.20 என்று விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.71, 200 என்று விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் மக்களை கவலை அடைய வைத்துள்ளது.