திருட வந்ததாக சந்தேகப்பட்டு இளைஞர் அடித்துக் கொலை – திருச்சி அருகே பரபரப்பு!!

0
பிரபல நடிகர் மரணம்.. உடலை வாங்க முன்வராத உறவினர்கள் - திரையுலகை உலுக்கிய சோகம்!
பிரபல நடிகர் மரணம்.. உடலை வாங்க முன்வராத உறவினர்கள் - திரையுலகை உலுக்கிய சோகம்!

திருச்சி அருகே திருட வந்தவர்கள் என நினைத்து பொது மக்கள் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியிலிலிருந்து கரூர் செல்லும் பாதையில் உள்ளது அல்லூர் கிராமம். இங்கு அக்ராஹாரத்திற்கு செல்லும் வயல்வெளி பாதையில் அமைந்திருந்த சாயிலெக்ஷ்மி நகரிலுள்ள ஒரு வீட்டின் கதவுகளை இரண்டு இளைஞர்கள் தட்டியுள்ளனர். வீட்டின் உரிமையாளரான வெங்கடேசன் என்பவரும் மற்றொருவரும் கதவுகளை திறக்க அந்த இளைஞர்கள் இருவரும் தப்பியோடியுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வீட்டில் ஆட்கள் யாரும் இல்லயென்றால் திருடலாம் என்ற எண்ணத்தில் கதவுகளை திட்டியதாக சந்தேகித்த வெங்கடேசன் இது பற்றி ஊருக்குள் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த ஊர் மக்கள் சிலர் திரண்டு வந்து அந்த இளைஞர்களை துரத்தியுள்ளனர். அவர்களுள் ஒருவர் தப்பியோடிய நிலையில் ஒருவர் மட்டும் மக்களிடம் மாட்டிக் கொண்டார். அதை தொடர்ந்து அவர் அங்கிருந்த ஒரு பெரிய கட்டையை எடுத்து மக்களை தாக்க முயன்றுள்ளார். வாகனங்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளார். இதனால் மிகவும் ஆத்திரமடைந்த மக்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து அடித்துள்ளனர்.

ரஜினிகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ், உடல்நிலையில் முன்னேற்றம்!!

அதன் பிறகு கை மற்றும் கால்களை கட்டி ஒரு சிறிய வாகனத்தில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஜீயர்புரம் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த நபர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். ஜீயர்புரம் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருட வந்ததாக சந்தேகப்பட்டு பொதுமக்கள் அடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here