இன்றைய காலகட்டத்தில் சட்டக் கல்வி பயில்வதற்கு ஏழை எளிய மாணவர்கள் மட்டுமல்லாமல் மாணவிகளும் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ஐந்து ஆண்டுகளாக உள்ள சட்டக்கல்வியை மூன்று ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என பாஜக வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். மேலும் ஏழை மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு 5 ஆண்டு சட்டக்கல்வி பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
சிறை நிர்வாகம் மீது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு புகார்.. வெளியான முக்கிய தகவல்!!
இந்நிலையில் மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “ஐந்து ஆண்டு சட்டக்கல்வியே குறைவானது என கருதுகிறோம். 5 ஆண்டு சட்டக்கல்வி மூலம் மாணவ மாணவிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதை ஏற்க முடியாது.” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.