இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் மட்டுமல்லாமல் வீட்டு வாடகை, டியூஷன் பீஸ் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி சுமார் ரூ.1.5 லட்சம் கோடி வரையிலான பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சில பிரச்சனைகளை ரிசர்வ் வங்கி எதிர்கொள்வதாக கூறி உள்ளனர். இதுபோன்ற பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்த ஆலோசித்து வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். எனவே ஒரு சில கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு, விரைவில் தடை விதிக்கப்படலாம். இருந்தாலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
சட்டக்கல்வியை 3 ஆண்டுகளாக குறைக்க மனு தாக்கல்., உச்ச நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!