Friday, May 3, 2024

தடாலடியாக உயர்ந்த தங்க விலை – அதிர்ச்சியில் மக்கள்!!

Must Read

தமிழகத்தில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது மக்களை கவலை அடைய வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த விலை இப்படி தடாலடியாக உயர்ந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கொரோனா பொது முடக்கம்:

கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் பரவலை கருத்தில் கொண்டு இந்தியா முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தொழில் நிறுவனங்கள் முடங்கியது. இதன் விளைவாக பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்தது, வரலாறு காணாத அளவிற்கு ஜிடிபி அதிரடியாக சரிந்தது. இப்படியாக இருந்ததால் தொழில் முனைவோர்கள் தங்கள் எதிர்கால நலன் மற்றும் தங்களது தொழில் நலன் கருதி பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதியதால் அதில் முதலீடு செய்தனர்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக பொது முடக்க காலத்தில் கூட தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து வந்தது. நகை பிரியர்கள், நடுத்தர மக்கள் மற்றும் சுபநிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று நினைத்தவர்கள் அனைவரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இந்த மாதத்தின் துவக்கத்தில் தங்க விலை சற்று குறைந்தாலும் அதிரடியாக அவ்வப்போது ஏற்றம் அடைந்து வந்தது. அந்த வகையில் இன்றும் தங்க விலை அதிகரித்துள்ளது.

இன்றைய விலை நிலவரம்:

சென்னையில் இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு 256 ரூபாய் அதிகரித்து ஒரு பவுன் தங்கம் 38,160 என்று விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 32 ரூபாய் அதிகரித்து 4,770 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதே போல் தூய தங்கம் (24 கேரட்) ஒரு பவுன் 256 ரூபாய் உயர்ந்து 41,456 என்று விற்பனை செய்யப்படுகிறது. இது ஒரு பக்கம் என்றால் வெள்ளியின் விலை சற்று சரிந்துள்ளது. ஒரு கிராம் 66.30 ரூபாய் என்றும் ஒரு கிலோ 66,700 என்றும் விற்பனை செய்யப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -