கொரோனா தடுப்பூசியை, யு.ஏ.இ., பிரதமர் ஷேக் முகமதுவுக்கு செலுத்தப்பட்டது. இதற்கான புகைப்படத்தை ‘டுவிட்டர்’ பக்கத்தில், வெளியிட்டுள்ளார்.
மருத்துவக்குழுவுக்கு பாராட்டு
மனித குலத்திற்கு கொரோனா மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. உலகம் முழுவதும், பல்வேறு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்சும், (யு.ஏ.இ., ) தடுப்பூசி கண்டறிந்துள்ளது. கடந்த சில வாரங்களாக யு.ஏ.இ.,யின் பல அமைச்சர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தற்போது, பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத்திற்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த புகைப்படத்தை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ஷேக் முகமது வெளியிட்டுள்ளார்.
ஷேக் முகமது கூறுகையில்,’ கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி எனக்கு செலுத்தப்பட்டது. தடுப்பூசி போடப்பட்ட, அனைவரும் ஆரோக்யமாக உள்ளோம். மருத்துவக்குழுவினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்,’
என, தெரிவித்துள்ளார்.