முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடமாடும் அம்மா உணவகச்சேவையை ஏழை மக்களின் பயனுக்காக இன்று சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார். கொரோனா பொது முடக்கத்தால் கஷ்டப்பட்ட ஏழை மக்களுக்காக நேரடியாக சென்று உணவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடமாடும் அம்மா உணவகம்:
முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இருந்த காலத்தில் ஏழை எளிய மக்களுக்களின் நலனுக்காக அம்மா உணவகம் என்ற திட்டம் துவக்கபட்டது. இந்த உணவகம் பல ஏழை எளிய மக்களுக்கு பயனாக அமைந்தது. உணவுகளும் சத்தாகவும் சுத்தமான முறையில் அமைந்ததால் பலர் தேடி சென்று விரும்பி உண்டனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தொடர்ந்து இச்சேவையை தொடங்க எடப்பாடி பழனிசாமி தற்போது நடமாடும் அம்மா உணவகத்தை சென்னையில் இன்று துவக்கி வைக்க உள்ளார். கொரோனா காலத்தில் விலையில்லா உணவகம் மக்களுக்கு பயனாக அமையும் என்று இச்சேவை தொடங்க உள்ளது.
இன்று துவக்கி வைப்பு:
வேலைக்கு செல்பவருக்கு நேரடியாக சென்று உணவு வழங்கும் முறையில் இந்த நடமாடும் அம்மா உணவகம் அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி எளிமையாக மக்களுக்கு உணவு கொண்டு செல்லும் முறையில் இச்சேவையை ஏற்படுத்தி உள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
நடமாடும் அம்மா உணவக சேவையினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் தொடங்க உள்ளார். வரும் காலத்தில் கட்டுமான தொழிலாருக்கும் எளிமையாக உணவு கிடைக்கும் வகையில் அமையும் என சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்