முதன் முதலாக தன் குழந்தைக்கு வைத்தியம் பார்க்கும் பாரதி – பல பாச போராட்டங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து பல எதிர்பாராத திருப்பங்கள் ஒளிபரப்பாகிக்கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது கண்ணம்மாவிற்கு பிரசவ காலத்தில் வெண்பா போட்ட ஊசியால் அடிக்கடி மயக்கம் ஏற்படுகிறது. இன்றைய எபிசோடில் கண்ணம்மா வேலை தேடி அழைக்கிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்றைய எபிசோடில் கண்ணம்மா டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க சொல்லி போராடுகிறார். ஆனால் பாரதி அவரை கணடபடி பேசி வெளியே அனுப்புகிறார். இந்நிலையில் தற்போது ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருக்கும் கண்ணம்மாவிற்கு மயக்கம் ஏற்படுகிறது. எப்படியோ வீட்டிற்கு சென்று விடுகிறார்.

barathi kannama

அங்கு துளசியிடம் தனக்கு மயக்கம் ஏற்பட்டதை சொல்ல துளசியும் பதட்டமடைகிறார். பாரதி வீட்டில் சௌந்தர்யா நடந்த விசயத்திற்கு பாரதியை திட்டி தீர்க்கிறார். ஆனால் பாரதி அதனை கண்டுகொள்வதாக இல்லை. மேலும் நடந்த அனைத்தையும் வெண்பாவிடம் கூறுகிறார். வெண்பா டெஸ்ட் எடுக்க விடாமல் என்ன செய்ய முடியும் என்று யோசிக்கிறார்.

இன்றைய எபிசோடில் குழந்தைக்கு வைத்தியம் பார்க்க சொல்லி சௌந்தர்யா வற்புறுத்துகிறார். இதனால் வேறு வழியில்லாமல் பாரதி குழந்தைக்கு அனைத்து சேவைகளையும் செய்கிறார். அடுத்ததாக கண்ணம்மா குழந்தைக்கு மருத்துக்கள் வாங்க கடைக்கு செல்கிறார். அவரிடம் இருக்கும் அனைத்து பணமும் தீர்ந்து போகிறது. இதனால் கடை கடையாக வேலை தேடி அழைக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க குழந்தை தூங்கிக்கொண்டிருக்கும் போது அங்கு வரும் அஞ்சலி குழந்தையின் முன்னால் தும்முகிறார். இதனால் கோவமடைகிறார். மேலும் அகிலன் ஏன் இப்படி செய்கிறார் என்று வாக்குவாதத்தில் ஈடுபட அஞ்சலி ஒரு அனாதை குழந்தைக்கு என் கிட்ட சண்டை போடுற என்று சொல்ல அகிலன் அஞ்சலியை கன்னத்தில் அறைகிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here