Friday, April 26, 2024

மகிழ்ச்சியின் உச்சத்தில் நகைப்பிரியர்கள் – அதிரடி விலை குறைப்பில் தங்கம்!!

Must Read

கடந்த சில நாட்களாக தங்க விலை குறைந்து மக்கள் மனதில் பால் வார்த்தது. இம்மாத தூக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்த தங்க விலை இன்றும் அதிரடியாக குறைந்து மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. தொடர்ச்சியாக விலை குறைந்து வருவதாலும், பண்டிகை காலம் நெருங்க உள்ளதாலும் மக்கள் நகைக்கடைகளுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

கொரோனா கால பொது முடக்கம்:

மார்ச் மாதம் நாட்டில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் பல இன்னல்களை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். அதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று தங்க விலை ஏற்றம். பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் தொழில் நிறுவனங்கள் முடக்கப்பட்டன. இதனால் பங்குச்சந்தை தொடர்ந்து சரிய தொடங்கியது.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கம் – மகிழ்ச்சியில் கோலிவுட், அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

பங்கு சந்தையின் வீழ்ச்சி முதலீட்டாளர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்தனர். பொது முடக்க காலத்தில் கூட தங்க விலை வரலாறு காணாத அளவு உயர்ந்தது. இதன் காரணமாக நகைக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இன்றைய விலை நிலவரம்:

ஆனால், பொது மக்கள் மிகுந்த கவலை அடைந்தனர். சுப நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று திட்டம் வைத்திருந்தவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகினர். இப்படியாக இருக்க கடந்த வாரம் தங்கம் அதிகபட்சமாக ஒரே நாளில் சவரனுக்கு 1,464 ரூபாய் குறைந்தது. ஆனால், வாரத்தின் முதல் நாளான நேற்று அதிரடியாக உயர்ந்தது. ஆனால், இன்று தங்க விலை முந்நூறு ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் (22 கேரட்) சவரனுக்கு 312 ரூபாய் குறைந்து 37,360 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் 39 ரூபாய் உயர்ந்து 4,670 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது. தூய தங்கம் (24 கேரட்) 312 ரூபாய் குறைந்து 40,360 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.10 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.66,100 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -