பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தார். இதனால் பல சர்ச்சைகளிலும் சிக்கினார். இதைக்கடந்து போய்க்கொண்டிருந்த வனிதா தற்போது பீட்டர் பாலையும் விட்டு பிரிந்துள்ளார். தற்போது இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் வனிதா.
வனிதா
பிரபல நடிகரான விஜயகுமாரின் மகள் தான் வனிதா. சில கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கும் வனிதா, தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும் அவர் முதல் திருமணம் விவகாரத்தில் முடிந்தது. இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகன் உள்ளார். தற்போது அவருக்கு 20 வயது ஆகிறது. அதன் பிறகு ஒரு தொழிலதிபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட வனிதா 2 வருடத்திற்கு பிறகு அவரையும் விவாகரத்து செய்தார்.
இதனால் சமுதாயத்தில் பலரும் அவரை கண்டபடி பேசி வந்தனர். ஆனால் அது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத வனிதா அதற்கு தக்க பதிலடியும் தந்தார். அதன் பிறகு அவருக்கு பிக் பாஸ் 3 இல் கலந்து கொண்டார். மேலும் பிக் பாஸ் வீட்டில் இவரால் பல சண்டைகளும் ஏற்பட்டது. அதன் பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்று அதில் டைட்டிலையும் கைப்பற்றினார்.
அதன் பிறகு லாக்டவுன் சமயத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் வனிதா. இதனால் பலரும் அவரை இழிவாக பேசி கமன்ட் செய்தனர். இதற்கு வனிதா பதிலடியும் கொடுத்தார். மேலும் பீட்டர் பாலுடன் வாழ்க்கை வாழ்கை சதோசமாக போய்க்கொண்டிருந்தது. இந்நிலையில் வனிதா கோவா சென்றிருந்தார். அங்கு பீட்டர் பால் குடித்து விட்டு போதையில் தள்ளாடி தனது சுயரூபத்தை காட்டியுள்ளார். இதனால் பீட்டர் பாலையும் வனிதா கழட்டி விட்டுள்ளார். இதற்கு தற்போது விளக்கமும் அளித்துள்ளார்.
ட்விட்டரில் அவர் கூறியதாவது, ‘காதலில் தோல்வி அடைவது எனது வழக்கமாகி விட்டது’. இது வாழ்க்கையில் எனக்கு ஒரு பாடம். வாழ்க்கையில் காதலில் நம்பிக்கை வைத்து அதில் ஏமாற்றம் அடைவது மிகவும் வேதனையாக உள்ளது. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் பெரியதாக தெரியாது. போலி செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். இதில் நான் எந்த தவறும் செய்யவில்லை.
To those who think I broke a home..I made a home with someone who didn't have a home and family for many years..he was in pain and so was I..we loved laughed and lived thru the worst times beginning from covid pandemic to the media circus which was purposely created around us.
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) October 19, 2020
அன்பு தேவைப்பட்ட ஒருவருக்கு கொடுத்தேன். இப்பொழுது என் வாழ்க்கையில் நம்பிக்கை, கனவு அனைத்தும் நொறுங்கும் நிலையில் இருக்கிறேன். ஆனாலும் பாசிட்டிவாக தான் உள்ளேன். மேலும் எனது குழந்தைகளுக்காக, அவர்களின் நலனுக்காக நல்ல முடிவை எடுப்பேன். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.