கடல் உணவுகள் என்றாலே அது மிகவும் சத்துக்கள் நிறைந்தது தான். பெரியவர்களும் எந்த பயமும் இல்லாமல் சாப்பிட கூடிய உணவுகளில் மீன் வகைகளும் ஒன்று. இப்பொழுது மீனை வைத்து புது விதமாக பக்கோடா எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மீன் – 1/2 கி
- மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- கரம் மசாலா – 1 தேக்கரண்டி
- மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
- இஞ்சிபூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- எலுமிச்சை சாறு
- பச்சைமிளகாய் – 2
- இஞ்சி – சிறிது
- கொத்தமல்லி – சிறிது
- புதினா – சிறிது
- உப்பு தேவையான அளவு
- கடலை மாவு
- அரிசி மாவு
செய்முறை:
- முதலில், மீனை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும். அதனுடன், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் எலுமிச்சை சாறினை போட்டு கலக்க வேணும்.
- இந்த கலவையை 2 முதல் 3 மணி நேரத்திற்கு வைத்து விடவும்.
- பின், வேறு ஒரு பாத்திரத்தில், அரிசி மாவு, கடலை மாவு, பேக்கிங் சோடா, மஞ்சள் தூள், சீரக தூள், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் உப்பு போடு கிளறவும்.
- மாவு பதத்திற்கு இதனை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கிளற வேண்டும்.
- வானொலியில், எண்ணெய் ஊற்றி சூடாக்கவும், எடுத்து வைத்திருக்கும் மாவில் மீன் துண்டுகளை முக்கி எடுத்து நன்றாக பொரிக்கவும்.
சூடான, சுவையான “மீன் பக்கோடா” தயார்!!