பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்தால் 5 பேர் பலி – விருதுநகரில் நடந்த கொடூரம்!!

0
படமாகும் தமிழகத்தையே புரட்டி போட்ட அந்த கொலை வழக்கு - பிரபல இயக்குனர் அதிரடி அறிவிப்பு!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட விபத்தினால் பட்டாசு தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்வதற்கான பட்டாசுகளுக்கான ஆலைகள் விருதுநகர் மாவட்டத்தில் அதிகமாக இயங்கி வருகிறது. அதிகமான வெயில் காரணமாகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ இந்த பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும். போதுமான பாதுகாப்பு வசதிகள் காணப்பட்டாலும், வெடி விபத்துக்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில், சாத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலை ஒன்றில் வெடிவிபத்து சம்பவம் நடந்துள்ளது.

இணையத்தில் வெளியான தளபதி 65 தோற்றம் – அதிர்ச்சியில் படக்குழுவினர்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சாத்தூர் அருகேயுள்ள அச்சன்குளம் கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி ஒரு பெண் உட்பட ஐந்து பேர் பலியாகியுள்ளனர். மேலும் படுகாயமடைந்த 10 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மீட்பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here