தமிழகத்தில் 8 வது முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கவுள்ளார். தற்போது இவரது வெற்றிக்கு அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர்:
தமிழகத்தில் நேற்று, நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. நேற்று காலை சுமார் 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலையில் இருந்தே திமுக கூட்டணி கட்சிகள் அதிக அளவிலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. பின்பு பிற்பகல் அளவில் திமுக கூட்டணி கட்சிகள் தான் தமிழகத்தில் அடுத்ததாக ஆட்சி அமைக்கப்போவதாக அனைவருக்கும் தெரியவந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதன் எதிரொலியாக நேற்று தமிழகத்தில் திமுக தொண்டர்கள் தங்களது கொண்டாட்டத்தை தொடங்கினர். முடிவில் திமுக கூட்டணி கட்சிகள் 159 தொகுதிகளில் வெற்றி பெற்று சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்பு ஆட்சியை அமைத்துள்ளது. முக்கிய தலைவர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி அவர்கள் இருவரும் இல்லாமல் நடந்த முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் @mkstalin
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 3, 2021
தமிழகத்தின் அடுத்த முதல்வரான ஸ்டாலின் – 7ம் தேதி பதவி ஏற்பு!!
இந்த தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் வெற்றியை பதிவு செய்ததால் நாடு முழுவதும் உள்ள கட்சி தலைவர்கள் ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். தற்போது அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி தற்போது தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.