பாக்கியலட்சுமி சீரியலில் மயூவை வீட்டிற்கு வரவழைத்ததை அடுத்து கோபி மாட்டிக்கொள்வாரா?? இல்லையா?? என்பது பெரிய ட்விஸ்ட்டாக உள்ளது. மேலும் எழில் தனது படத்திற்கான கதையை பற்றி பேசிகொண்டுள்ளனர்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் எழிலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அமிர்தா மீது ஒரு அபிப்ராயம் வருகிறது. மேலும் எழில் தனது கதையில் ஒரு விதவை பெண்ணிற்கு மீண்டும் காதல் வருவதை பற்றி மையமாக வைத்து கதை எடுக்கப்போவதாக சொல்கிறார். இது சரி வருமா?? என மற்றவர்கள் யோசித்துக்கொண்டுள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அப்பொழுது அமிர்தா அங்கு வருகிறார். அவரிடம் அதனை பற்றி கேட்க அவருக்கு என்னவோ போல ஆகிறது. ஆனாலும் இது அவர்களின் விருப்பம் இதில் தவறில்லை என்று கூறுகிறார். அடுத்ததாக பாக்கியா மயூவை வீட்டிற்கு அழைத்து வருகிறார். வீட்டில் உள்ள அனைவரும் மயூவை நன்கு கவனித்து கொள்கின்றனர்.
ராதிகா குன்னக்குடி செல்வதாகவும் அதனால் தான் மயூவை அழைத்து வந்ததாகவும் சொல்கிறார். ராதிகாவுக்கு தற்போது இருக்கும் பிரச்சனைகளை பற்றி வீட்டில் சொல்கிறார். அடுத்ததாக மயூ தூங்கி விடுகிறார். அடுத்ததாக கோபி வேலையை முடித்து விட்டு வருகிறார்.
குழந்தையை பார்த்து விட்டு ஷாக்காகிறார். என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கிறார். ராதிகாவிற்கு கால் செய்து மறைமுகமாக மயூவை பற்றி கேட்கிறார். மயூவை பாக்கியா வீட்டில் விட்டதை பற்றி சொல்கிறார். இதனால் கோபி திட்டுகிறார். கோபி திட்டுவதை பார்த்து ராதிகாவுக்கு கோவம் வருகிறது.
என் பொண்ணு மேல உங்களை விட எனக்கு அக்கறை இருக்கு. பாக்கியா வீடு ரொம்ப பாதுகாப்பு தான். எந்த பிரச்சனையும் இல்லை. எனக்கு பிரச்சனை இருக்கும் போது உங்களை ஆளவே காணோம் என்று கோவமாக போனை வைக்கிறார்.