‘திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பே இருக்காது’ – ஸ்டாலினை வறுத்தெடுத்த எடப்பாடி!!

0

தேர்தலுக்காக தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் தமிழக முதல்வர் தனது எதிர்க்கட்சியான திமுகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். தற்போது அந்த வகையில் திமுகவை சுட்டிக்காட்டி பெண்கள் பாதுகாப்பு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் அடுத்த வாரம் செவ்வாய்கிழமை அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் ஒரு வாரமே இருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் அனல் நெருப்பாக கொதித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அனைத்து கட்சிகளும் பிரச்சாரங்களில் கடுமையாக பேசி வருகின்றனர். தொடக்கத்தில் அனைத்து கட்சிகளும் தான் ஆட்சிக்கு வந்தால் அத செய்வேன் இத செய்வேன் என்று கூறிவந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் நாட்கள் போக போக அனைத்து கட்சிகளும் தனது போட்டி கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகள் கிளம்புகிறது. அந்த வகையில் கடந்த சனிக்கிழமை அன்று திமுகவின் ஆ.ராசா எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசிய பேச்சு சர்ச்சையானது. மேலும் தற்போது மநீம கட்சி தலைவர் கமல், பாஜக வானதி பற்றி சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கருத்தை தெரிவித்துள்ளார்.

அப்பாடா ஒருவழியா மீட்டுட்டாங்கப்பா – சூயஸ் கால்வாயில் மிதக்கும் நிலைக்கு கொண்டு வரப்பட்ட சரக்கு கப்பல்!!

இதனால் அரசியல் களம் தொடர்ந்து பரபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஸ்டாலின் மேயராக மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த பொழுது சென்னைக்கு என்ன செய்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு கட்டாயமாக பாதுகாப்பு இருக்காது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here