பண்ணை ஊழியர்களுடன் மகேந்திர சிங் தோனி – வைரலாகும் புகைப்படம்!!

0

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி தற்போது தனது பண்ணையில் விவசாயம் செய்து வருகிறார். தனது பண்ணையில் பணிபுரியும் ஊழியர்களுடன் தோனி புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தோனி:

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அன்று சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். ஆனால் அவர் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார். இவர் இந்திய அணிக்காக உலக கோப்பை, ஆசிய கோப்பை என பல கோப்பைகளை வாங்கி தந்துள்ளார். மேலும் ஒரு கீப்பராக பல சாதனைகளை படைத்துள்ளார். இவரது சாதனைகளை எவராலும் முறியடிக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். இவரை ரசிகர்கள் கேப்டன் கூல் என்று அழைத்து வருவார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது தோனி தனது பண்ணையில் விவசாயம் செய்து வருகிறார். இவரது பண்ணையில் காய்கள், கனிகள் மற்றும் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். மேலும் சில தினங்களுக்கு முன்பு இவரது பண்ணையில் விளைந்த காய் மற்றும் கனிகளை ஏற்றுமதியும் செய்துள்ளார். அந்த அளவிற்கு தோனி விவசாயத்தில் மூழ்கியுள்ளார்.

வாட்ஸ் ஆப் புதிய கொள்கை – மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!!

ஏற்றுமதி செய்யும் அளவிற்கு இவரது பண்ணையில் காய் மற்றும் கனிகள் விளைந்துள்ளது. இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அது என்னவென்றால் தோனி தனது பண்ணையில் பணிபுரியும் பெண்களுடன் சேர்ந்து புன்சிரிப்புடன் நின்று புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here