வாட்ஸ் ஆப் புதிய கொள்கை குறித்த வழக்கில் உச்சநீதி மன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு, பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
வாட்ஸ் ஆப்:
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை அறிவித்தது. அதன்படி புதிய கொள்கையில் மக்களின் அனைத்து தகவல்களையும் வாட்ஸ் ஆப் நிறுவனம் பெறுவதற்கு நாம் அனுமதித்தால் மட்டுமே வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்த முடியும் என்று அதிரடியாக அறிவித்தது. இதனால் பயனாளர்கள் அனைவரும் அச்சமடைந்தனர். சில பயனாளர்கள் இந்த செயலியை விட்டு வேறு செயலிக்கு மாறினர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதுகுறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் பல தகவலை மக்களுக்கு தெரிவித்தும் அதற்கு பயனில்லை. இதுகுறித்த தகவல்களை மத்திய அரசு வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் கேட்டுப்பெறலாம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் டெல்லி மாநிலத்தை சேர்ந்த கர்மான்யா சிங் வாட்ஸ் ஆப் செயலியின் புதிய கொள்கையை தடை விதிக்க கூறி வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
பிக்பாஸ் புகழ் ஷிவானிக்கு விரைவில் திருமணம் – அட மாப்பிள்ளை இவர் தானா?!
தற்போது அந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி முன்னிலைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கூறியதாவது, மக்கள் அனைவரும் தங்களது தகவலை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புகிறார்கள். வாட்ஸ் ஆப் செயலியின் மதிப்பு 4 ட்ரில்லியன் ஆக இருக்கலாம். ஆனால் அவற்றை விட மக்களின் தகவல் பாதுகாப்பு தான் முக்கியம் என்று தெரிவித்தார். மேலும் இதுகுறித்து மத்திய அரசு, பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.