தடுப்பூசி செலுத்துவதற்கான இடைவெளி நீட்டிப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

0

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றினை குறைப்பதற்கு அவசரகால பயன்பாட்டிற்காக தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தடுப்பூசி செலுத்துவதற்கான இடைவேளை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தடுப்பூசி:

இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனாவிற்கு எதிரான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இதனை முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டது. பின்பு 45 வயதிற்கு மேற்பட்ட இணைநோயாளிகளுக்கு என்று பகுதி பகுதியாக வழங்கப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தடுப்பூசியை இரண்டு டோஸாக செலுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவித்தது. தற்போது நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க மருந்து நிறுவனங்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு 6 முதல் 8 வாரங்கள் இடைவேளை இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

corona vaccine
corona vaccine

தமிழகத்தில் அரசு பேருந்துகள் ஆம்புலன்ஸாக மாற்றம்??அமைச்சர் அதிரடி!!

தற்போது இதன் இடைவேளையை நீட்டித்துள்ளனர். இதுகுறித்து வல்லுநர்கள் மத்திய சுகாதாரத்துறையினருக்கு பரிசீலினை செய்து தற்போது அதற்கு சுகாதாரத்துறை ஒப்புதலும் வழங்கியுள்ளது. அதன்படி இனி முதல் மற்றும் இரண்டாம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்த 12 முதல் 16 வாரங்கள் இடைவேளை இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here