கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் இந்நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மஹராஷ்ட்ராவில் 346 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா
சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியா உலகளவில் 3 வது இடத்தில உள்ளது. மேலும் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் நோய் தொற்று அதிகமாக உள்ளது. அந்த வரிசையில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களும் உள்ளன.
இதனையடுத்து மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் 346 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதித்த காவலர்களின் எண்ணிக்கை 14,641 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 11,152 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,741 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2 காவலர்கள் பலியாகியுள்ளனர்.