நடிகர் சூர்யா தனது “சூரரை போற்று” படத்தின் மூலமாக கிடைத்த வருவாய் ரூபாய் 5 கோடியை நிதியாக சங்கங்களுக்கு வழங்கியுள்ளார்.
“சூரரை போற்று” திரைப்படம்:
நடிகர் சூர்யாவின் 38 வது படம் “”சூரரை போற்று” திரைப்படம், இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் முடிந்தது. இந்த படம் சூர்யாவின் 2D நிறுவனமும், குனிட் மோங்காவின் சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்தது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார், பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக படத்தை வெளியிடாமல் இருந்தனர்.
கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!!
ஆனால், சில நாட்களுக்கு முன் நடிகர் சூர்யா தனது “சூரரை போற்று” திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று அறிவித்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இந்த முடிவில் தீவிரமாக இருந்த நடிகர் சூர்யா வரும் 30 ஆம் தேதி இந்த படம் அமேசான் ப்ரைம் இல் வெளியாகும் என்று தெரிவித்தார்.
நிதி உதவி:
இந்த திரைப்படத்தின் வியாபாரம் மூலமாக கிடைக்கும் பணத்தை சங்கங்களுக்கு நிதி உதவியாக வழங்கபடும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். அதே போல் இன்று அந்த படத்தின் முலமாக கிடைத்த 5 கோடி ரூபாயை நிதியாக பல்வேறு அமைப்புகளுக்கு வழங்கியுள்ளார்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
ரூபாய் 1.5 கோடியை திரைப்பட சங்கத்திற்கும், 1 கோடி ரூபாய் பெப்சி நிறுவனத்திற்கும், 20 லட்சம் ரூபாய் இயக்குனர்கள் சங்கத்திற்கும், 30 லட்சம் ரூபாய் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், 20 லட்சம் ரூபாய் நடிகர்கள் சங்கத்திற்கும் அளித்துள்ளார். கொரோனா காலத்தில் முன் நின்று பணியாற்றிய முன்களப்பணியாளர்களுக்கு நிதி அளிக்கவும் உள்ளார்.
நடிகர் சூர்யாவின் இந்த செயலால் அவரது ரசிகர்கள் பெருமிதத்தில் உள்ளனர்.